அதிக சுய இன்பப் பழக்க‍த்தினால் ஆணுறுப்பு சிறிதாகுமா?

அதிக சுய இன்பப் பழக்க‍த்தினால் ஆணுறுப்பு சிறிதாகுமா? – ஆண்களுக்கான அலசல்

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் :

சுயஇன்பம் பற்றி மாபெரும் அலசல், suya inbam, அதிக சுய இன்பப் பழக்க‍த்தினால் ஆணுறுப்பு சிறிதாகுமா?
  • என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.
  • அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்து விட்டது.
  • விந்து விரைவில் வெளியேறி விடுகிறது.
  • பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல்லை. அதற்குள் தளர்ந்து விடுகிறது.
  • என்சிறிய உறுப்பால் என் மனைவி யைத் திருப்திப்படுத்த முடிவதில்லை.
மேற்கண்ட பிரச்சனை இருப்பவரா நீங்கள்? அப்படியானால் அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை இது .

முதலில் உங்கள் பிரச்சனைகளை நினைக்கும் முன் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

  • மனசுக்குள் நிறைய கற்பனைகள் செய்பவரா?
  • அதீத கற்பனைகளால் உந்தப்பட்டு சுயஇன்பம் செய்து கொள்பவரா?
  • உடல்பயிற்சிகள் செய்யாதவரா..?
  • வயிற்றுப்பகுதியில்உள்ள தசைகளை இறுக்கி வைக்கும் க்ரெஞ்ச் என்னும் உடல் பயிற்சியை செய்யாதவரா?
  • தொந்தி/தொப்பை உடையவரா ?
  • ப்ளட் ப்ரெஷர் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்பவரா?
மேற்கண்ட அனைத்துக்கும் ஆம் என்று பதில் இருந்தால் கட்டாயம் உங்களுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருக்கும்.

  • விந்து முந்தி வெளியேறுதல்
  • விறைப்பின்மை
  • ஆண்குறி சிறியதாக மாறிவிட்ட‍தோ என்ற பிரம்மை
மேற்கண்டவற்றைத் தவிர்க்க முயன்றால் இப்பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

குறிப்பாக BP மற்றும் சுகருக்கான மாத்திரைகள் நம் உடலில் இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தி ரத்தத்தில் இருக்கும் க்ளூகோஸைக் கட்டுப்படுத்தக் கூடியவை. இயல்பான விறைப்புத் தன்மைக்கு ரத்த ஓட்டம் மிகுதியாக இருத்தலும் க்ளூகோஸின் அளவு சரியாக இருத்தலும் மிகஅவசியம். எனவே மேற்கண்ட நோய்களை உடையவர்கள் தங்களது நிலைமை உணர்ந்து அதீத ஆசைகள் படுவதைத் தவிர்க்கலாம்.

மேற்கண்ட வியாதிகள் அல்லாமல் இளைஞர்களாய் இருப்பவர்களுக்கு இப்பிரச்சனை இருப்பின் அதீத கற்பனைகளைத் தவிர்த்து இயல்பாக இருக்கப் பழகிக் கொள்ளவேண்டும்.

சரியான உடற்பயிற்சிகளைச் செய்து உடலைக்கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும்.

ஒரு பாகம் வெந்தயத்துடன் இரண்டு பாகம் நீர் சேர்த்து வேக வைத்து நீர் வற்றிய பின் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி பெருகும்.

ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணைத் திருப்திப்படுத்து வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும். காமக் கிளர்ச்சியிலிருந்து உச்சநிலைக்கு அழைத்துச் செல்வது உறுப்பு உரசல்தான். ஆண்குறி இல்லாமல் லெஸ்பியன்கள் உறுப்பு உரசல் மூலம் உச்சமடைகிறார்கள். சுயஇன்பமும் செய்து கொள்கிறார்கள்.

காமத்துக்கு வடிகால் தேடாதவர்களின் ஆண்குறிதான் எப்போதும் பாதி விறைத்தநிலையில் இருக்கும். அதைபெரிய ஆண்குறி என்று எடுத்துக் கொள்ள முடியாது. காமசிந்தனைகள் அற்ற நிலையில் பெரும்பாலான ஆண்குறிகள் மூன்றிலிருந்து ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும். இதனால் அதை சிறுத்த ஆண் குறி என்று சொல்ல முடியாது.
அதீத சுயஇன்பத்தால் அதிகவிந்து வெளியேறி உறுப்பு தளர்ந்து விட்டதாகவும் விந்து குறைந்துவிட்ட தாகவும் நினைப்பதும் தவறு. யாராவது நான் அதிகமாக எச்சில் துப்பும் பழக்கத்தால் வாய் தளர்ந்து எச்சில் ஊறுவதும் குறைந்து விட்டது என்றுசொல்லி கேட்டிருக்கிறீர்களா ?
எச்சில் துப்புவதும் ஊறுவதும் போலவே விந்தும் ஊறிக்கொண்டும் வெளியேறிக்கொண்டும் இருக்கிறது. சுய இன்பப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட மாதத்தில் இரண்டொரு முறை தானே விந்து வெளியேறிவிடும். இது ஒரு குறையே அல்ல மாறாக இது ஒரு ஆரோக்கியமான நிலை.

முறையற்ற திருட்டுத்தனமான உடல்உறவில் விந்து சீக்கிரம் வெளியேறுவது இயல்பு. தக்க சூழலும் அமைதியும் நிம்மதியும் இருக்கும்போது உடலுறவு நீண்ட நேரம் நீடிக்கிறது.

உரிமை இல்லாதவரிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்னும் பயத்தில் ஈடுபடும் உடலுறவு பலவீனமானதாக முடியும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...