வசதி வாய்ப்பு பெருக செய்யவேண்டிய சில எளிய தெய்வ வழிபாடுகள்..!

[Selvam peruga vasadhi vaippu varuvadharkku seiyyavendiya sila theiva vazhipadugal]
ஒவ்வொரு தமிழ்மாதத்திலும் ஏதாவது ஒரு திங்கள் கிழமையன்று திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும். இப்படி 12 மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில்  ஒருவருடம் வரை ஸ்ரீபாலாஜியை தரிசிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் பலரின் பொருளாதார உயர்வு சிறிது சிறிதாக மேம்படும்.

Selvam peruga vasadhi vaippu varuvadharkku seiyyavendiya sila theiva vazhipadugal, aanmeegam, tamil gods to get rich, kupera poojai, Lakshmi poojai, swamy vazhipaadu,ஒவ்வொரு வருடமும் கார்த்திகைமாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை மணிக்கு திருஅண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு வருகை புரிந்து அங்கு நடக்கும் நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, கிரிவலம் செல்ல வேண்டும்.

குபேர லிங்கத்தில் தொடங்கி , குபேர லிங்கத்தில் கிரிவலம் முடித்து , பின்பு உங்கள் இல்லம் திரும்ப வேண்டும்.

வீட்டில் மாதம் தோறும் குபேரபூஜை அல்லது மகாலட்சுமி பூஜை செய்து வர வேண்டும்.
Also Read: பாவங்கள் போக்க பாபநாசம் போவதேன்..!

சனிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை வேளையில் திருப்பதி வெங்கடாசலபதி புகைப்படம் வைத்து சுப்ரபாதம் ஒலிக்க விட்டு தீப தூப ஆராதனை செய்து வழிபட்டு வர வேண்டும்.

முடிந்த அளவு சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்திற்கு உங்களால் முடிந்த அளவு வெள்ளிக்கிழமைகளில் சென்று வழிபட வேண்டும்.

செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு அடிக்கடி செய்ய வேண்டும். பெருமாள் கோவிலில் பைரவர் இருப்பது அரிது.

அதுவும் செல்வத்திற்கு அதிபதியான பெருமாள் கோவிலில் செல்வத்தை தரும் பைரவர் இருப்பது மிகவும் அரிது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு செளந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு மிகவும் விசேஷம் வாய்ந்தது. பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமிகளில் இக்கோவில் சென்றால் மிகுந்த சிரமத்திற்கிடையில்தான் பைரவர் தரிசனம் முடியும்.


Also Read: சிர்கழி கோவிந்தராஜன் தமிழ் ஹிட் - விநாயகர் முருகன் பக்தி பாடல்கள் தொகுப்பு..


அண்டை மாவட்டமான கொங்கு மண்டலத்தில் இருந்து பல ஜவுளி ஆலை அதிபர்கள், செல்வந்தர்கள் பலர் இந்த தேய்பிறை அஷ்டமி பூஜையில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையில் தொடர்ந்து கொள்வது மிக சிறப்பு வாய்ந்த பொருளாதார உயர்வுகளை கொடுக்கும்.

via http://www.maalaimalar.com/2015/07/05114923/The-economic-boom-in-some-simp.html
Selvam peruga vasadhi vaippu varuvadharkku seiyyavendiya sila theiva vazhipadugal, aanmeegam, tamil gods to get rich, kupera poojai, Lakshmi poojai, swamy vazhipaadu,

6 comments:

  1. ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது செல்வம் பெருக மந்திரம்

    ReplyDelete
  2. Maid
    நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  3. Maid
    நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  4. ஐயா எனக்கு சில நண்பர்கள் பணம் பல லட்சங்களில் கொடுக்க வேண்டும் அனால் இப்போது தருகிறேன் அப்போதய தருகிறேன் என்றி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நல்ல முறையில் பணத்தை வாங்கவேண்டும் அதற்கு தேவையான முறையான ஆலோசனைகளை வழங்கவும்.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...