தினம் ஒரு கை பிடி பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை சாப்பிட்டால் உங்கள் ஆயுள் கூடும்

Dinam oru kai pidi baadham paruppu alladhu verkkadalai sappittaal aayul koodum..

தினமும் 10 அல்லது 15 கிராம் பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை உண்ணும் பழக்கம் இருந்தால், ஆரோக்கியம் கூடி நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சமீபத்தில் நெதர்லாண்ட் நாட்டில் உள்ள மாஸ்டிரிக்ட் பல்கலை  ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், தினந் தோறும் வேர்க் கடலை அல்லது பாதாம்பருப்பு உண்பவர்களுக்கு, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகளான மாரடைப்பு, Eat a hand full of almond or peanut everyday will increase your lifetime.. ground nut or almond is good for health and raise normal life span. Tamil health news, New research about healthy foods, Nuts for good healthபுற்றுநோய், சுவாசக் குழாய் நோய்கள் போன்றவை ஏற்படுவதில்லை என தெரியவந்துள்ளது. இது போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் வராமல் இருப்பதற்கு காரணம் அவற்றில் காணப்படும் நிறைவுறாத கொழுப்பு
அமிலங்கள், விட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்களே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், மாமிசம், நெய் போன்றவற்றில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைப் போல் இருதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பதில்லை என்றும், இவற்றில் காணப்படும் நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வர விடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இவற்றை தினந்தோறும் உண்டு வந்தால் ஆபத்தான நோய்களில் இருந்து நம்மைக் காத்து கொள்வதுடன், பக்கவாதம், பசியின்மை, பலவீனம், எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

Source: dinamalar.com

Eat a hand full of almond or peanut everyday will increase your lifetime.. ground nut or almond is good for health and raise normal life span. Tamil health news, New research about healthy foods, Nuts for good health, niraivuraadha koluppu amilangal, vitamins, anti oxidants  
Funny Comments: ** டாக்டர் குருசாமி முதலியார் என்ற வள்ளல் ஒருவர் சென்ற நூற்றாண்டில் இருந்தார். அவரிடம் ஒரு ஏழை, காச நோய் (டிபி)க்கு வைத்தியம் பார்க்க வந்தார். அவரிடம் தினமும் கொஞ்சம் பொட்டுக் கடலை வாங்கி அதை மென்று கொண்டே நடந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.அதபோல உபயோகமான செய்தி வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். எல்லோருக்கும் பாதாம் வாங்கும் சக்தி இருக்காது. தற்சமய விலையில் தினசரி கடலை வாங்குவது கூட சிரமம் தான்.

**பாதாம் அதிகம் சாப்பிட்டால் புற்று நோய் வரும் எண்பது உண்மை அல்ல....தாராளமாக சாப்பிடலாம்

3 comments:

  1. jagadhish பாதாம் அதிகம் சாப்பிட்டால் புற்று நோய் வரும் எண்பது உண்மை அல்ல....தாராளமாக சாப்பிடலாம்

    ReplyDelete
  2. பாதாம் பருப்பு அல்லது பாதாம் பால் சாப்பிடுவது உடலுக்கு பல வழிகளில் நன்மை தரும்...காலை ஒரு நேரம் பாதாம் பாலில் சீரியல்ஸ் போட்டு சாப்பிட்டால் மதியம் வரை வேறு எந்த உணவும் தேவை படாது..பாதாம் சாப்பிடுவதால் இருதயம், பல், மற்றும், எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்..நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம் உள்ளது. சிறு குழைந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகப்படும்.. மாட்டு பாலில் உள்ளது போல் கெட்ட கொழுப்பு கிடையாது...மாட்டு பால் 1% அல்லது 2% பால் தான் தொடர்ந்து உபயோகிப்பது நல்லது ஆனால் பாதாம் பாலில் எந்த கெடுதியும் கிடையாது..வேர்கடலையை அவித்து சாப்பிடுவது நல்லது....

    ReplyDelete
  3. டாக்டர் குருசாமி முதலியார் என்ற வள்ளல் ஒருவர் சென்ற நூற்றாண்டில் இருந்தார். அவரிடம் ஒரு ஏழை, காச நோய் (டிபி)க்கு வைத்தியம் பார்க்க வந்தார். அவரிடம் தினமும் கொஞ்சம் பொட்டுக் கடலை வாங்கி அதை மென்று கொண்டே நடந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.அதபோல உபயோகமான செய்தி வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். எல்லோருக்கும் பாதாம் வாங்கும் சக்தி இருக்காது. தற்சமய விலையில் தினசரி கடலை வாங்குவது கூட சிரமம் தான்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...