தியானம் செய்ய வழி என்ன? - தென்கச்சி கோ .சுவாமிநாதன்

தியானம் செய்ய வழி என்ன என்பது குறித்து தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன சிறுகதையை இங்கு பார்ப்போம்..

ஒரு சின்ன ஊர். அங்கே ஒரு பள்ளிக்கூடம். அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை. பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை.
-
எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால், தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான்.
வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான்.
-
ஆசிரியர் அவனை கவனித்தார்.
”என்னப்பா… இப்படி உக்கார்ந்திருக்கே… படிப்பில் கவனமில்லையா…?
”ஐயா… என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு!”
“அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு?”
”ஒரு பசுமாடு இருக்கு!”
என்னப்பா சொல்றே
-

Related Posts:


ஐயா.. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசு மாடு வாங்கிட்டு வந்தார், அதை எங்க வீட்டு வாசல்ல கட்டி போட்டிருக்கார். என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு
ஆசிரியர் கோபமடைந்தார், யோசித்தார்,
-
தம்பி! ஒண்ணு செய்
”நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன்.. நீ என்ன பண்ற… நம்ம ஊர் எல்லையில ஒரு மலை இருக்கே.. அங்க ஒரு குகை இருக்கு… அதுல போய் உக்கார்ந்துக்க! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை… பிறகு வா…!”
”சரி.. சார்…! என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான்.
-
ஆசிரியர் நினைத்து கொண்டார்
”ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான். பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான்”
ஒரு வாரம் கழிந்தது.
-
ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார்.
அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான்.
அவர் அவனிடம்
”என்னப்பா! மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே?
அவன் இல்லை என தலை ஆட்டினான்.
அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய்?
-
அவன் சொன்னான்” சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன், ஆனா என் தலைல இருக்கற கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது “.
ஆசிரியர் திகைத்து நின்றார். மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து, இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான்.
-
ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு.
-
நாம யாரை பத்தி அடிக்கடி நினைத்து கொண்டு இருக்கிறோமோ, பேசி கொண்டு இருக்கிறோமோ அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும், நாம அவங்களா மாறுகிறோம்.
விவேகானந்தர் கூட சொல்லுவர்
-

”நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்”
என்று.

 தியானம் செய்ய வழி என்ன?  தென்கச்சி கோ .சுவாமிநாதன் thiyanam seiyya vazhi, meditation jen story in tamil,

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...