மணத்தக்காளியின் முக்கியத்துவம்...

மணத்தக்காளியின் முக்கியத்துவம்... ( Manathakkali payangal)

Manathakkali payangalவாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலு ம் புண் இருக்கு ம். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு  வர வாய்ப் புண்ணு ம், வயிற்றுப் புண்ணு ம் குணமாகு ம். 100 கிரா ம் கீரையில் ஈரப்பத ம் 82.1%, புரத ம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%,  மாவுச்சத்து 8.9% உள்ளன.

நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிரா ம் கால்சியமு ம், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு  ஆகிய அளிக்க 70 மில்லி கிரா ம் எரிய ம் (றிலீஷீsஜீலீஷீக்ஷீus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கு ம் 11 மில்லி கிரா ம் வைட்டமின் சி யு ம் இக்கீரையில்  உள்ளன. மூலநோய்க்கு ம் குடல் பிரச்னைக்கு ம் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளு ம்  வாய்ப்பு அதிக ம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமு ம் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்று ம் வீக்கங்கள், கட்டிகள்  முதலியவற்றை எதிர்த்துப் போரிடு ம். அவற்றைக் குணப்படுத்தியு ம் விடு ம்.

சிறுநீர்க் கோளாறுகளை நீக்கு ம். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவு ம் வழி அமைத்துக் கொடுக்கு ம். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து  சாப்பிடு ம் போது கசப்பு குறைவாய் இருக்கு ம். நீர்க்கோவை நோய் மிகச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கசாயமாய்  அருந்தலா ம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலா ம். கீரையையு ம், இளந்தண்டுகளையு ம் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு  மில்லி வீத ம் அருந்தலா ம்.

மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலு ம் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகு ம். கீரையைப் போலவே பழமு ம்  சக்தி வாய்ந்த மருந்தாகு ம். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமு ம் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயு ம், பழமு ம் மிளகு அளவேதான்  இருக்கு ம். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவு ம் இப்பழ ம் உதவுகிறது. தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலா ம். உடலில் வலி உள்ள இடங்களிலு ம் வலிநீக்கு ம் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலா ம். நாள்பட்ட நோய்  வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமு ம் அருந்தி  வரவேண்டு ம். மணத்தக்காளிக் காயை வற்றல் போடலா ம். வற்றலிலு ம் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது.

புதுமணத்த ம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழ ம் போது ம். இப்பழ ம் உடனே கருத்தரிக்கச் செய்யு ம். உருவான கரு வலிமை பெறவு ம்  இப்பழ ம் பயன்படுகிறது. பிரசவ ம் எளிதாக நடைபெறவு ம் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபல ம் பெற இப்பழத்தை அவசிய ம் சாப்பிட வேண்டு ம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...